Sunday 23 April 2017

ஜோதிடமும் மருத்துவமும்


ஜோதிடமும் மருத்துவமும் பகுதி-3

வயிற்றை வைத்துதான் ஒரு பெண் தாய்மை அடைந்திருக்கின்றாரா இல்லையா என்பதை பொதுவாக கண்டறிகின்றோம்

வயிற்றின் மையமாக இருப்பது தொப்புள்.
சூரியன்தான் அனைத்து கிரகங்களுக்கும் மையமாக இருந்து அணைத்து கிரகங்களையும் இணைக்கின்றது.

சிருஷ்டி இங்கேதான் உருவாக்கப்படுகின்றது. குழந்தை தாயின் தொப்புள்கொடி வாயிலாகத்தான் தனக்கு தேவையான உயிர் சக்தியை பெறுகின்றது.

நவீன மருத்துவம் கூட தொப்புள் கொடியை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தேவையான நோய்களை குணப்படுத்தலாம் என்று கூறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த இடம்தான் தொப்புள். ஓர் உயிர் ஜனிக்கின்ற இடம்.

காலப்புருஷனுக்கு 5க்குரியவர் சூரியன். 5 ஆம் பாவம் புத்திரபாக்கியத்தை குறிக்கும். 
எனவேதான் தொப்புளுக்கு காரகன் சூரியன் ஆவார். சூரியனுடைய சக்தியை நாம் அறிவோம். 5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

நமது இந்து மதத்தில் வழிபாட்டு முறைகள் எல்லாம் நமது சக்தி மையத்தை மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
(பார்க்க படம்). என்னுடைய ஜோதிடமும் மருத்துவமும் என்ள முதல் பகுதியில் கூட இந்து மத வழிபாட்டில் சில இரகசியங்களை குறிப்பிட்டிருந்தேன். இறைவனின் உருவத்தில் மனிதனின் சக்தி வாய்ந்த இடங்களை மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆங்கிலத்தில் Unconscious நிலை என்று சொல்லப்படும் உணர்வற்ற நிலையில் இருக்கும் நோயாளியின் தொப்புள் கொடியில் அழுத்தம் கொடுத்துவர சக்திநிலை உயிர்ப்பிக்கப்பட்டு நோய் குணமடைய செய்கின்றனர்.

5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

இவ்வளவு இரகசியங்களை கொண்ட நம் ஜோதிடத்தை நம் வழிபாட்டு முறைகளை அழிக்க துடிக்கும் அந்நிய சக்திகளை வேரறுப்போம்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்