Sunday 23 April 2017



ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை
------------------------------------------------------------------------
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 

மேச ராசியின் குணாதிசயங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்திருக்கும்.இது போல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.

மேசம்
மேச ராசியின் உருவம் ஆடு ஆகும்.எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆட்டு மந்தையைக்கவனியுங்கள்,அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களை கலகக்காரர்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது,அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும். இதனால்தான் மேச ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும்,ஆனால் இறங்கத்தெரியாது,இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் மேச ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.

ரிசபம்
ரிசப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது  நமக்கு  பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும்,நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது,உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூரலாம். இதனால் ரிசப ராசியினர்  மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதை பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்,தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதுவர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். காதல் உணர்வு அதிக மாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது   நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால், சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள்  தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண் ஆகும். தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்,இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும்  நடுநிலை தவறாதவர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே  இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக  எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும்,இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்.

மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்,ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.பொறுமை இவர்களுக்கு அதிகம்.

கும்பம்
            கும்ப ராசியின் உருவம் பானயை தலையில்  சுமந்தபடி   நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.

மீனம்
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
எனக்குத்தெரிந்தவரை ஒரு சில குணாதிசயங்களை மட்டும் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். 
          - சித்தயோகி சிவதாசன் ரவி-

அடிப்படை ஜோதிட பாடங்கள்

ராசிகளும் அதிபதிகளும்

மேசம் Aries - செவ்வாய் Mars
ரிசபம் Taurus - சுக்கிரன் Venus
மிதுனம் Gemini - புதன் Mercury
கடகம் Cancer - சந்திரன் Moon
சிம்மம் Leo - சூரியன் Sun
கன்னி Virgo - புதன் Mercury
துலாம் Libra - சுக்கிரன் Venus
விருச்சிகம் Scorpio - செவ்வாய் Mars
தனுசு Sagittarius - குரு Jupiter
மகரம் Capricorn - சனி Saturn
கும்பம் Aquarius - சனி Saturn
மீனம் Pisces - குரு Jupiter
12 ராசிகளும் அதில் உள்ள 27 நட்சத்திரங்களையும் காண்போம்

சென்ற பாடத்தில் பூமியில் இருந்து பார்க்கும் போது பூமியை மற்ற கிரகங்கள் சுற்றி வருவது போல ஒரு மாய தோற்றம் உருவாகிறது என்பதனை பார்த்தோம். கிரகங்கள் ஒரு ஒழுங்கு முறையில் சுற்றி வருகின்றது. 

கிரகங்களை வானில் தற்போது எங்கு சஞ்சரிக்கின்றன என்பதனை அறிய நமக்கு ஓர் அடையாளம் தேவைப்படுகின்றது.

அதனால் அவை வானில் சஞ்சரிக்கும் போது அது செல்லும் பாதையில் உள்ள 27 நட்சத்திர கூட்டங்களை நமது முன்னோர்கள் அறிந்தனர்.

அவ்வாறு இருக்கும் 27 நட்சத்திர மண்டலத்தை ராசியாக பிரித்தனர். ராசி என்பது ஒரு கற்பனை கோடு.

ஒரு வட்டத்தின் சுற்றளவு 360 பாகை
இதனை 12 சம பாகமாக பிரித்து ஒரு ராசிக்கு 30 பாகை என ஒதுக்கீடு செய்தனர்

படத்தினை பார்க்க

ராசி மண்டலம் 360 பாகை
ஒரு ராசி 30 பாகை
1 நட்சத்திரத்தின் அளவு 13 பாகை 20 கலை
ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலை


அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரகங்கள் வானில் சூரியனை ஒரு ஒழுங்குமுறையில் சுற்றி வருகின்றன. ஆனால் புவியிலிருந்து பார்க்கும் போது அவை பூமியை சுற்றி வருவது போல தோன்றுகிறது.

நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் உரையாடும் போது நான் இந்தியா என்ற நாட்டில் தமிழநாடு என்ற மாநிலத்தில் சென்னையில் வசிக்கின்றோம் என்று குறிப்பிடுகின்றோம் அல்லவா

அது போல வானில் கிரகங்கள் தற்போது எங்கு பயணிக்கின்றது என்பதனை அறிய ராசி, நட்சத்திரம், பாதம் முதலியனவற்றால் குறிக்கப்படுகின்றது

ராசி என்பதன் பொருள் மொத்தம் அல்லது கூரு என்று அர்த்தம்.

ராசி மண்டலம் என்பது ஒரு கற்பனை கோடு ஆகும். வானத்தை 12 சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

மண்டலம் என்றால் ஒரு சுற்று என பொருள்படும். எனவே ஒரு சுற்றை 12 பாகமாக பிரித்தால் ஒரு ராசிக்கு 30 பாகை வரும்.

ஜாதகம் கணிப்பதற்கான சூத்திரம்
காலம்+இடம்
நாம் இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த ஊரில் பிறந்தோம். இதனை பயன்படுத்தியே ஜாதகம் கணிக்கிறோம். ஜாதகன் பிறந்த நேரத்தில் வானில் கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சரிக்கின்றன என்பதை பஞ்சாங்கத்தின் உதவியுடன் கணிக்கின்றோம்

தின ராசிபலன் 24/04/2017

24/04/2017 தினப்பலன்
ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம் 11 ஆம் தேதி
திங்கள் கிழமை
உத்திரட்டாதி நட்சத்திரம்
தேய்பிறை திரயோதசி திதி

தென்னாட்டுயை சிவனருளால் ஈரேழுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்றிருப்பதாக. ததாஸ்து. ஓம் நமசிவாய

அனைவருக்கும் காலை வணக்கங்கள்

மேசம்
மூத்த சகோதர்களால் நன்மை,
நண்பர்களால் வெற்றி, லாபம் அடைவீர்கள். சிலருக்கு செலவுக்கு ஏற்படும்.

ரிசபம்
புதிய விசயங்களை துவங்கி அதில் வெற்றியும் புகழும் அடைவீர்கள். கார்ய சித்தி தினம் இன்று.

மிதுனம்
தொலைதூர பயணம் ஒன்றுக்கு திட்டமிடுவீர்கள். புனித யாத்திரை, ஆலய வழிபாடு என நாள் செல்லும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். காலையில் தந்தை அல்லது குருவிடம் ஆசி பெறுங்கள்.

கடகம்
பயணம் செய்வீர்கள். அலைச்சல் இருக்கும். விமர்சனங்கள் உண்டாகும். துணை மூலம் வரவு உண்டு.

சிம்மம்
சந்திராஷ்டம தினம். கவனம் தேவை.
கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சமூக தொடர்பு உண்டாகும்.

கன்னி
போட்டிகள் நிறைந்த நாள் இன்று.
சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலைகள் அமையும். கூட்டணி அமைத்து செய்யும் விசயங்களில் வெற்றி உண்டாகும்

துலாம்
மகிழ்ச்சிகரமான நாள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்
கேளிக்கை பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு இருக்கும். சிலர் மாலைக்கு பிறகு பயணம் மேற்கொள்வீர்கள்

விருச்சிகம்
நிலம், வீடு, வாகனம் அல்லது வீட்டிற்கு தேவையான சொகுசுப் பொருட்கள் வாங்க முயற்சி செய்யலாம். ஆன்மீகம், ஹீலிங் அல்லது ஜோதிட சம்பந்தமான கல்வி துவங்க நல்ல நாள். தாயின் ஆசி உண்டு. சிலர் வீட்டிலிருந்தபடியே தொழில் துவங்க முயற்சி செய்வீர்கள்

தனுசு
சகோதரர்கள் ஆதரவு தருவார்கள், இடமாற்றம் அல்லது பயணம் பற்றிய சிந்தனை செய்வீர்கள. புது முயற்சிகள் செய்ய நல்ல நாள். துணையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்

மகரம்
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்
தனவரவு உண்டு. சுகபோஜனம். தானியங்கள் சேர்க்கை. கனிவாக பேசுவீர்கள். பேசியே கார்யங்களை சாதிக்கும் நாள் இன்று.

கும்பம்
நற்சிந்தனை, கௌரவம், தேக ஆரோக்யம் உண்டாகும். ஆன்மீக சிந்தனைகள் உண்டாகும். நற்பெயர் உண்டாகும்

மீனம்
செலவு உண்டாகும். ஆராய்ச்சி மனப்பான்மை உண்டாகும். சிலர் மருத்துவ சிகிச்சை எடுப்பார்கள். வெளிநாடு தொடர்பான கார்யங்களில் ஈடுபடுவீர்கள்.

இன்று தனவரவு உள்ள ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம்
கன்னி, துலாம், மகரம்

செலவு ஏற்படும் ராசிகள்
மேசம் மீனம்

பயணம் செய்யும் ராசிகள்
மகரம் கடகம்
தனுசு மிதுனம்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
சென்னை
7200044010

பரிகார சூட்சுமங்கள்

Hidden Secrets of Indian Astrology

பரிகார சூட்சுமங்கள் Part 7

தீமை செய்யும் கிரகங்கள் காற்று ராசியில் இருந்தால்
If malefic planets in Air Sign

நவதானியங்களையோ or பாபகிரகத்திற்குண்டான தானியத்தை சுமார் 10 கிராமிற்கும் குறைவாக எடுத்துக்கொண்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.

பிறகு பலூனில் சிறிதளவு அந்த பவுடரை போட வேண்டும். பிறகு நீங்களே அந்த பலூனை ஊதி முடிச்சு போட்டு காற்றில் பறக்க விட்டுவிடுங்கள்.

பலூனின் எண்ணிக்கை

காற்று ராசியில் அமர்ந்த கிரகம்

சூரியன் 6
சந்திரன் 10
புதன் 17
சுக்கிரன் 20
செவ்வாய் 7
குரு 16
சனி 19
ராகு 18
கேது 7

அல்லது உங்கள் வயது எவ்வளவோ அந்த எண்ணிக்கையில் பலூன் ஊதி காற்றில் பறக்க விடுங்கள். சந்தோசமாக வாழுங்கள்

மிக மிக எளிமையான பரிகாரம் இது.

மக்கள் சேவையில்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

பரிகார சூட்சுமங்கள்

Hidden Secrets of Indian Astrology

பரிகார சூட்சுமங்கள் Part 6

தீமை செய்யும் கிரகங்கள் நெருப்பு ராசியில் இருந்தால்
If malefic planets in Fire Sign

நவதானியங்களையோ or பாபகிரகத்திற்குண்டான தானியத்தை சுமார் 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு பரணி நட்சத்திர நாளில் ஊரின் ஒதுக்குப்புறமாக
சென்று கல் அடுப்பு வைத்து நெருப்பை உண்டாக்கி அதில் அந்த தானியங்களை போட்டு எரித்துவிட வேண்டும்

இல்லை எனில்

வீட்டில் / கோவிலில் நவக்கிரக சாந்தி ஹோமம் செய்து தானியங்களை ஹோம நெருப்பில் ஆகுதியாக போட்டுவிட தோஷம் நிவர்த்திஅடையும்

மிக மிக எளிமையான பரிகாரம் இது.

மக்கள் சேவையில்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

பரிகார சூட்சுமங்கள்

Hidden Secrets of Indian Astrology

பரிகார சூட்சுமங்கள் Part 5

தீமை செய்யும் கிரகங்கள் நீர் ராசியில் இருந்தால்
If malefic planets in Water Sign

நவதானியங்களையோ or பாபகிரகத்திற்குண்டான தானியத்தை சுமார் 500 கிராம் அளவு எடுத்துக்கொண்டு உரலில் போட்டு இடித்து கொள்ளவும். இதனை பூசம்/அனுஸம்/உத்திரட்டாதி நட்சத்திர நாளில்
ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் விட்டுவிட தோஷம் நிவர்த்திஅடையும்.
குறிப்பாக மீன் அதிகமாக உள்ள இடமாக பார்த்து விட வேண்டும். மீன்கள் அதை உண்ணும் அளவில் மிகமிக சிறியதாக இடிக்க வேண்டும்

மிக மிக எளிமையான பரிகாரம் இது.

மக்கள் சேவையில்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

பரிகார சூட்சுமங்கள்


Hidden Secrets of Indian Astrology

பரிகார சூட்சுமங்கள் Part 4

தீமை செய்யும் கிரகங்கள் நில ராசியில் இருந்தால் 
If malefic planets in Earth Sign

நவதானியங்களையோ or பாபகிரகத்திற்குண்டான தானியத்தை சுமார் 1 கிலோவிற்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளவும்.

மழை பெய்யும் என்றைக்கு பெய்கிறதோ அந்த நாளில் அல்லது அதற்கு அடுத்த நாளில் ஊருக்கு ஒதுக்கு புறமாக சென்று 
தானியங்களை நிலத்தில் சிறிது சிறிதாக அள்ளி போட்டு கொண்டே செல்ல தோஷம் நிவர்த்திஅடையும்.

அப்படி இல்லை எனில்

நவதானிய மிக்சரை / நவதானியத்தை சிறிதாக உரலில் போட்டு இடித்து எறும்புக்கு போடவேண்டும். இவ்வாறு செய்வதால் தோசம் நிவர்த்தி அடையும்.

முளைப்பாரியும் இதற்கு நல்ல பரிகாரம் ஆகும்.

மிக மிக எளிமையான பரிகாரம் இது.

மக்கள் சேவையில்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

ஜோதிடமும் மருத்துவமும்


ஜோதிடமும் மருத்துவமும் பகுதி-3

வயிற்றை வைத்துதான் ஒரு பெண் தாய்மை அடைந்திருக்கின்றாரா இல்லையா என்பதை பொதுவாக கண்டறிகின்றோம்

வயிற்றின் மையமாக இருப்பது தொப்புள்.
சூரியன்தான் அனைத்து கிரகங்களுக்கும் மையமாக இருந்து அணைத்து கிரகங்களையும் இணைக்கின்றது.

சிருஷ்டி இங்கேதான் உருவாக்கப்படுகின்றது. குழந்தை தாயின் தொப்புள்கொடி வாயிலாகத்தான் தனக்கு தேவையான உயிர் சக்தியை பெறுகின்றது.

நவீன மருத்துவம் கூட தொப்புள் கொடியை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தேவையான நோய்களை குணப்படுத்தலாம் என்று கூறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த இடம்தான் தொப்புள். ஓர் உயிர் ஜனிக்கின்ற இடம்.

காலப்புருஷனுக்கு 5க்குரியவர் சூரியன். 5 ஆம் பாவம் புத்திரபாக்கியத்தை குறிக்கும். 
எனவேதான் தொப்புளுக்கு காரகன் சூரியன் ஆவார். சூரியனுடைய சக்தியை நாம் அறிவோம். 5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

நமது இந்து மதத்தில் வழிபாட்டு முறைகள் எல்லாம் நமது சக்தி மையத்தை மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
(பார்க்க படம்). என்னுடைய ஜோதிடமும் மருத்துவமும் என்ள முதல் பகுதியில் கூட இந்து மத வழிபாட்டில் சில இரகசியங்களை குறிப்பிட்டிருந்தேன். இறைவனின் உருவத்தில் மனிதனின் சக்தி வாய்ந்த இடங்களை மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆங்கிலத்தில் Unconscious நிலை என்று சொல்லப்படும் உணர்வற்ற நிலையில் இருக்கும் நோயாளியின் தொப்புள் கொடியில் அழுத்தம் கொடுத்துவர சக்திநிலை உயிர்ப்பிக்கப்பட்டு நோய் குணமடைய செய்கின்றனர்.

5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

இவ்வளவு இரகசியங்களை கொண்ட நம் ஜோதிடத்தை நம் வழிபாட்டு முறைகளை அழிக்க துடிக்கும் அந்நிய சக்திகளை வேரறுப்போம்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010

ஜோதிடமும் மருத்துவமும்

மருத்துவமும் ஜோதிடமும் - பகுதி 2

சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் கிரகம் புதன் ஆகும்.

புதனின் ஒருப்பகுதி மிகுந்த குளிர்த்தன்மை வாய்ந்த பனிக்கட்டி போன்று இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.

நீங்கள் வெயிலில் செல்லும்போது உங்கள் கழுத்தின் ஒருபுறம் மட்டும் வியர்வையை சுரந்து சட்டை காலரை அழுக்காக்கி விடும்

நீங்கள் வெயில் சென்று வந்த பிறகு கைகளை நீரை பிடித்து பின்னங்கழுத்தை கழுவ உடம்பு நீங்கள் இருக்கும் அறையின் வெப்பநிலையை அடையும் என்று நவீன மருத்துவம் கூறுகின்றது.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதன். முன்பெல்லாம் உடல் ஜூரத்தால் பாதிக்கப்பட்டால் ஒரு துணியை நீரில் நனைத்து புழிந்து நெற்றியில் வைத்திருப்பார்இள். இது உடலின் வெப்ப நிலையை சரி செய்யும் தன்மை கொண்டது.

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்.
7200044010

ஜோதிடமும் மருத்துவமும்

ஜோதிடமும் மருத்துவமும் பிரிக்க முடியாதவை ஆகும்.

முகநூல் நண்பர்கள் இந்த பதிவினை மிகவும் அதிகமாக முகநூல் வாயிலாகவும் வாட்ஸ்அப் மற்றும் இன்னும் பிற சமூக ஊடகங்கள் மூலம் ஷேர் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டுகின்றேன்.

நாடி ஜோதிடத்தில் குரு ஜீவகாரகன் என்று அழைக்கப்படுகின்றார். ஜீவன் என்றால் உயிர் என்று அர்த்தம்.

இந்த ஜீவகாரகனின் ஒரு வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைகின்றார். மீனம் பாதங்களை குறிக்கும். 

சுக்கிராச்சாரியருக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை கொண்டவர் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றது

சுக்கிரனின் அதிபதியான மஹாலக்ஷ்மி தாயாரும் பகவான் ஶ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருப்பதை காணுகின்றோம்.

அதாவது ஜீவன் கால்களிலே அதிலும் குறிப்பாக பாதங்களிலே இருக்கின்றது என்பதை மறைமுகமாக உணர்த்துவதே இதன் தத்துவமாகும். 

அக்குபஞ்சர் மருத்துவம் கூட கைகள் மற்றும் கால்பகுதிகளிலேயே பல சிகிச்சைகளை அளிக்கின்றது.

முக்கியமாக பல்ஸ் மிகவும் குறையும் போது கையின் சுக்கிரனை குறிக்கும் கட்டை விரல், புதனை குறிக்கும் சுண்டு விரல் மற்றும் ஜீவகாரகன் குரு ஆட்சி பெறும் மற்றும் சுக்கிரன் உச்சம் பெறும் கால்களில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்துவதன் மூலம் அவரை உயிர்ப்புடன் இருக்கச்செய்கிறது.

புதன் மீனராசியில் நீச்சம் அடைகின்றது. புத்தியை குறிக்கும் கிரகம் புதன். அதாவது புத்தி சுவாதீனமாவர்கள், மூளைவளம் குன்றியவர்கள் இவர்களுக்கு கூட கால்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அவர்களை உயிர்பிக்க முடியும்.

புதன் புத்தியை குறிக்கும் என்று பார்த்தோம். புதன் கைகளை குறிக்கும் கிரகமாகும். காலப்புருஷனுக்கு ஆறாம் பாவம் நோய்களை குறிக்கும். இந்த ஆறாம் ராசியில் உச்சமடையும் கிரகம் புதன். நீசம் ஆகும் கிரகம் சுக்கிரன்.
நோய் வந்தால் ஜீவன் அவஸ்தை பெறும்.

இறைவனின் கைகள் ஒன்று உள்ளங்கைகளை காட்டி மேல்நோக்கியும் மற்றொரு கை கால்களை நோக்கியும் இருக்கும்.

எனவே புத்தி, அறிவு குறைந்தவர்களுக்கு தொடர்ந்து கைகளில் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தும் போது புத்தி பலம் அடையும். நோய் குணமாகும்.

உயிருக்கு அவசரம், தீவிர நோய் தாக்கத்தில் இருப்பவர்களை காப்பாற்ற கால்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். (((இறந்தவர்களின் கால்களை கட்டிவைக்கும் பழக்கம் நமக்கு உண்டு)))

படங்களில் நாம் பார்த்திருப்போம். 
மயக்கமடைந்தவர்களை மார்பில் அழுத்தம் கொடுத்தவுடன் அவர்கள் கண் விழிப்பார்கள். ரஜினி நடத்திய சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும். பல படங்களில் இந்த காட்சிவரும்.
உயிருக்கு போராடுபவர்களை மின்சார அயன்பாக்ஸ் போன்ற வடிவில் உள்ள இரண்டு கருவிகளை மார்பில் வைத்து அழுத்துவார்கள். உடனே உடல் மேல்தூக்கி போடும். சில முறைகள் செய்தவுடன் உடல் உயிர் பெறும்.

ஜீவகாரகன் குரு உச்சமடைவது மார்பை குறிக்கும் கடக ராசியில்தான். எனவேதான் ஆங்கில மருத்துவர்கள் மார்பிலே அழுத்தம் கொடுக்கின்றார்கள். 

பெண்களே எப்போதும் ஆண்களுக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நம்மை பெறும் போது கடும் வலியினை அடைந்து இரத்த போக்கையும் அடைந்து மீண்டும் உயிர் பெறுகின்றாள். அந்த சமயத்தில் அவள்படும் பாட்டை வார்த்தைகளால் எழுத முடியாது.

மேலும் நமக்கு பாலூட்டி சோறூட்டி
நமக்கான பல அன்றாட வேலைகளை செய்பளும் பெண்தான்

எனவே அந்த பெண் எப்போதும் உயிர் சக்தியினை பெறுவதற்காக 
புதன் குறிக்கும் கழுத்தில் நகைகளும், குரு உச்சமடையும் பகுதியான மார்பில் தாலியும், கால்களை குறிக்கும் பகுதியில் கொலுசும் மெட்டியும் அணிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த இடம் அழுத்தப்பட்டு உயிர்சக்தி பெறப்படுகின்றது (சில மதங்கள் பெண்கள் ஒரு பொட்டு நகை கூட அணியகூடாதும் என்றும், அணிந்தால் இறைவன் முக்தி தரமாட்டார் என்றும் கூறுவது வருத்தம் அளிக்கின்றது)

திருமணமடைந்த பெண்களே எப்போதும் தாலியுடனும், காலில் கொலுசுடனும் மெட்டியுடனும் இருங்கள். அவைகள் உங்கள் உயிர்காக்கும் கருவிகளாகும்.

ஆத்ம காரகன் உச்சமடையும் தலையில் இருக்கும் நெற்றி வகிட்டில்
குங்குமம் வைக்கும் போது அந்த பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் ஆத்மபலம் பெறப்படுகின்றது.

புதன், குரு, சுக்கிரன், சூரியன் இவர்கள் குறிக்கும் பகுதியில்தான் உயிர்சத்தும் ஜீவனும் ஆத்மசக்தியும் உள்ளது. இதனை தூண்டியே அக்குபஞ்சர் மருத்துவம் செயல்படுகின்றது.

ஜோதிடமும் மருத்துவமும் கசடற கற்ற ஒரு மருத்துவரால் எந்த ஒரு தீவிர நோயின் தாக்கத்தால் இருந்தாலும் கூட அவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி எனது ஆராய்ச்சி கட்டுரையை முடிக்கின்றேன்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010


பரிகார சூட்சுமங்கள் - 2

மோட்சம் என்றால் கர்மங்களில் இருந்து விடுபடுதலை குறிக்கும்

ஜோதிடத்தில் மோட்ச ராசிகள்
கடகம் விருச்சிகம் மீனம் ஆகும்

கடகத்தில் 
உச்சமடையும் சுப கிரகம் குரு
நீச்சமடையும் பாவ கிரகம் செவ்வாய்

விருச்சிகத்தில் உச்சமடையும் கிரகம் கேது
நீசமடையும் கிரகம் சந்திரன்

மீனத்தில் உச்சமடையும் கிரகம் சுக்கிரன்
நீசமடையும் கிரகம் புதன்

குருவும் சுக்கிரனும் தங்கம் மற்றும் ஆபரணங்களை குறிக்கும். சுக்கிரன் விலை உயர்ந்த ஆடைகளை குறிப்பார்

சந்திரன் மனம் மற்றும் உடலை குறிப்பார்
புதன் புத்தியை குறிப்பவர்.

அந்த காலத்தில் செல்வந்தர்கள் அரசர்கள் அமைச்சர்கள் விலை உயர்ந்த தங்கம், ஆபரணங்கள், பட்டு வஸ்திரங்கள் கோவிலுக்கு தானமளித்து தங்களது உச்சகர்மங்களில் இருந்து மனதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசர்கள் போரில் பலரை வதைப்பதால் அதிகமான பாவ கர்மங்கள் உண்டாகின்றது

செல்வந்தர்கள் செழிப்பாக இருப்பதால் பலருடைய பொறாமை பார்வை அவர்களுக்கு தோஷம் ஏற்படுகின்றது.

எனவே அவர்கள் மேற்சொன்ன பொருட்களை கோவிலுக்கு தானமளித்து தமது கர்மங்களிலில் இருந்து விடுபட்டுள்ளனர்.

பரிகாரம் சொல்லும் போது
ஏழைகளுக்கு பகுதி 1 இல் (முன் பதிவில்) உள்ளது போல சொல்ல வேண்டும்

செல்வந்தர்களுக்கு இப்பதிவில் சொன்னது போல சொல்ல வேண்டும்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
7200044010
பரிகார சூட்சுமங்கள் - 1

மோட்சம் என்றால் கர்ம வினைகளில் இருந்து விடுபடுதல் என்று அர்த்தம்

ஜோதிடத்தில் மோட்ச ராசிகள் மூன்று
கடகம் விருச்சிகம் மீனம்

கடக ராசியில் வரும் பூசம் பால்மடியை குறிக்கும்

விருச்சிகத்தில் வரும் அனுஷம் குடையை குறிக்கும்

மீனத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திரம் காமதேனு என்ற பசுவை குறிக்கும்

மீனத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் காலணிகளை குறிக்கும்

தீராத வினைகள் இருப்பவர்கள் பிராமணர்களுக்கு அல்லது ஜோதிடர்களுக்கு மேற்சொன்ன பொருட்களை தானமாக கொடுத்தால் தீராத கர்மங்களில் இருந்து விடுபடலாம்.

இந்த காலத்தில் கோதானம் விலை உயர்ந்த விசயம் ஆகும். மேலும் பசுவை அவர்களுக்கு பராமரிக்க தெரியுமா என நமக்கு தெரியாது. எனவே குடையும் காலணியையும் தானமாக கொடுத்து தீராத கர்மங்களில் இருந்து விடுபடலாம்.

சித்தயோகியாரின் வகுப்பறை குறிப்பிலிருந்து......

நவகிரகங்கள் ஏன் சிவன் கோயில்களில் மட்டும் அமைந்திருக்கின்றன


நவகிரக சன்னதிகள் ஏன் சிவன் கோவிலில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை யோசித்து பல புத்தகங்களை புரட்டியும் பல இணைய தளங்களை தேடிய போது அதன் பதிலில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் ஒரு சிவலிங்கம் படத்தினை இணையத்தில் இருந்து இறக்கி நீண்ட நேரம் யோசித்த போது சில விசயங்கள் பிடிபட்டது

அதனை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்

வானத்தில் கிரகங்கள் எல்லாம் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகின்றன

வட்டம் அல்ல, நீள்வட்டம் அதாவது Oval shape

இப்போது அப்படியே லிங்கத்தினை பாருங்கள். அதுதான் சூரிய குடும்பத்தின் சுற்றுவட்டப்பாதை ஆகும். இதைதான் நாம் வழிபடுகின்றோம். என்ன எனது பதிலில் நம்பிக்கை இல்லையா. இப்போது நான் பதிந்திருக்கும் படத்தினை பாருங்கள்.

நந்தியினை ஒரு மனிதானக பாருங்கள்.

ஆவுடையார் பால்வீதி ஆகும்.
ஆவுடையாரில் லிங்கம் பால்வீதியில் உள்ள சூரிய குடும்பம் ஆகும்

ஆவுடையாரின் நீண்ட பகுதியை டெலஸ்கோப் ஆக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

லிங்கத்தை சூரிய குடும்பத்தின் நீள்வட்டபாதையாக கண்டுகொள்ளுங்கள்.

ஒரு மனிதன் ஒரு நீண்ட குழாய் வழியாக வானில் தோன்றும் கிரக சஞ்சாரங்களை கண்டறியும் விஞ்ஞானம் சிவலிங்க ரூபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பாரத்தால் தெரியும் ரூபமே நவகிரகங்கள்

எனவேதான் சிவன் கோவில்களில் மட்டும் நவகிரகங்கள் அமைந்துள்ளன.

நாடி ஜோதிடர் & பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
சென்னை
7200044010

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்