Monday 24 April 2017

ஜோதிடம் கற்க

நேரிலும், இணைய வழியிலும் ஜோதிடம் கற்க


வேத ஜோதிடம்
தசாபுத்தி பலன்கள்
திருமணப் பொருத்தம்
பிருகு நந்தி நாடி ஜோதிடம்
சப்த ரிஷி நாடி ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
கோச்சார பலன்கள்
பிரஸன்ன ஜோதிடம்
வாஸ்து



பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்

தொடர்புக்கு:-
  
நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
பாலகிருஷ்ணாபுரம் 6வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை 
7200044010.
Facebook:-
https://www.facebook.com/senthilds08
Whatsapp:-7200044010
Email:- senthilds2008@gmail.com 

ஜோதிட பலன் அறிய

நாடி முறையில் ஜோதிட பலன் அறிய, பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் அறிய தொடர்பு கொள்ளவும்.

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
பாலகிருஷ்ணாபுரம் 6வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை
7200044010
Facebook:-https://www.facebook.com/senthilds08
Whatsapp:- 7200044010
Email:- senthilds2008@gmail.com

Consultation, Learn Astrolgy, Vasthu consultation, Gemology





நாடி முறையில் ஜோதிட பலன் அறிய, பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் அறிய, வீடு அலுவலகங்களுக்கு வாஸ்து பார்க்க, அதிர்ஷ்ட கற்கள் மூலம் வாழ்வினில் வளம் பெற, வேலையின்மை, திருமண தடைக்கு முறையான பரகார ரகசியங்கள் அறிய, ""பணத்தை வசீகரிக்கும் முறைகளை கற்க" ஜோதிடம் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்
நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
பாலகிருஷ்ணாபுரம் 6வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை
7200044010

Financial Astrology part 10

Financial Astrology part 10 (செலவு)

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

இதே போல சுக்கிரனுக்கு 12இல் அமர்ந்த கிரக காரகத்துவங்கள் மூலம் செலவு ஏற்படும்.

Financial Astrology part 9

Financial Astrology part 9

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

இதேபோல் இரண்டில் அமர்ந்த கிரகம், இரண்டுக்குடையவனுக்கு இரண்டில் அமர்ந்த கிரகம் மூலம் பண வரவு உண்டு.

Financial Astrology part 8

Financial Astrology part 8

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் புதன்

ஜாதகருக்கு புதனின் காரகத்துவங்கள் மூலம் பணம் வரும்.
புத்தகம், மாணவர்கள், எழுதுப் பொருட்கள், எழுது மை, வியாபாரம் மூலம் பணம் வரும்.

Financial Astrology part 7

Financial Astrology part 7

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் கேது

ஜாதகருக்கு கேதுவின் காரகத்துவங்கள் மூலம் பணம் வரும். ஆன்மீகம், ஜோதிடம், தையல், ஹீலிங் மூலம் பணம் வரும்.

ஜாதகர் ஆன்மீக பாதையிலிருந்து விலகினால் பணவரவு தடைபடும்.

Financial Astrology part 6

Financial Astrology part 6

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் ராகு

ஜாதகருக்கு ராகுவின் காரகத்துவங்கள் மூலம் பணம் வரும். ஜாதகருடைய பொருள் காரகத்துவங்கள் பன்மடங்கு விருத்தியடையும். அந்நியர்கள் மூலம் பணம் வரும். போதைப்பொருட்கள் மூலம் பணம் வரும். ஜாதகருக்கு பல வழிகளில் பணம் வரும்.

Financial Astrology -5

Financial Astrology part 5


நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் சந்திரன்

ஜாதகருக்கு சந்திரனின் காரகத்துவங்கள் மூலம் பணம் வரும். தாய், தாய்மை அடைந்த பெண்கள், உணவுப் பொருட்கள் மூலம் பணம் வரும். ஜாதகர் பெரிய செலவாளியாக இருப்பார்.
இவர்கள் கைக்கு பணம் வந்தவுடன் குடும்ப உறுப்பினர்களிடம் பணத்தை தந்துவிட வேண்டும். இல்லை எனில் பணம் செலவாகிவிடும்.

Financial Astrology part 4

Financial Astrology part 4

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் சனி

ஜாதகருக்கு சனியின் காரகத்துவங்களால் பணம் வரும். ஜாதகர் வேலைக்கு செல்வதன் மூலம் பணம் வரும். பெரியப்பா, அண்ணன், லேலைக்காரர்கள் மூலம் தனவரவு வரும்.

Financial Astrology part 3

Financial Astrology part 3

நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் குரு

ஜாதகருக்கு குருவின் காரகத்துவங்களால் பணம் வரும். ஜாதகர் ஏதாவது வகுப்புகள் எடுத்து பொருளீட்டுபவராக இருப்பார்.
குழந்தைகள் மூலம் பணம் வரும்.
நலம் விரும்பிகள் மூலம் பணம் வரும்.

Financial Astrology part 2

Financial Astrology part 2


நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் செவ்வாய்

இளைய சகோதரன், இளைய மைத்துனன்
 செவ்வாயினுடைய காரகத்துவ பெயர்களை கொண்ட நபர்களால் பணம் வரும்.

உதாரணம் விசாகன், சண்முகம், மணிவேல், துரை முருகன், கார்த்திகேயன்

செவ்வாய் வலுத்தால் சிலருக்கு போலீஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மூலமும் பணம் வரும்.

செவ்வாய் பாப கிரகங்களால் பார்க்கப்பட்ட்ல் சமூக விரோதிகள் மூலம் பணம் வரும்.

Financial Astrology part 1

Financial Astrology part 1


நாடி ஜோதிட விதிகளின் படி சுக்கிரனுக்கு 2 இல் அமைந்த கிரக காரகத்துவத்தின் வழியாக பணம் வரும்

உதாரணம்
ஆண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு இரண்டில் சூரியன்
தந்தை, மாமனார், மூத்த மகன், ஜோதிடம், மருத்துவம், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், சூரியனுடைய காரகத்துவ பெயர்களை கொண்ட நபர்களால் பணம் வரும்.

ஜோதிட அடிப்படை



மூலத்திரிகோண வீடுகளை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள சுலபமான வழி

காலப்புருச லக்னத்திற்கு ஒற்றைப்படை ராசிகளில் 3ஆம் ராசியைத் தவிர மற்ற ராசிஅதிபதிகள் அந்தந்த வீட்டிலேயே மூலத்திரிகோணமடைகின்றன

1 மேசம் செவ்வாய்
5 சிம்மம் சூரியன்
7 துலாம் சுக்கிரன்
9 தனுசு குரு
11 கும்பம் சனி

மீதி உள்ள கிரகங்களான
சந்திரன் ரிசபத்திலும்
புதன் கன்னி ராசியிலும் மூலத்திரிகோணம் அடைகின்றன.

லால் கிதாப் பரிகாரங்கள்

பரிகாரம்

12 இராசிகளுக்கும் லால் கிதாப்
பரிகாரங்கள்
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-
1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்.

-நன்றி திரு ஶ்ரீதர் ராமகிருஷ்ணன்

காலப்புருஷ தத்துவம்

காலப்புருஷ தத்துவத்தில் புதிய சிந்தனை
(சிந்தனையில் தோன்றியதை இங்கு உங்கள் பார்வைக்கு)

***சூரியனிலிருந்து வலதுபுறமாகவும்
சந்திரனிலிருந்து இடதுபுறமாகவும் காணவும்***

சூரியன் சந்திரனிலிருந்து இரண்டுக்குடைய புதன் வாக்கு மற்றும் பேச்சிற்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து மூன்றுக்குடைய சுக்கிரன் வீரியத்திற்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து நான்கிற்குடைய
செவ்வாய் பூமி காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஐந்திற்குடைய குரு புத்திரகாரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஆறுக்குடைய சனி அடிமை வேலைக்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஏழுக்குடைய சனி ஆயுள்காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து எட்டுக்குடைய குரு மறைஞான விசயங்களுக்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஒன்பதிற்குடைய செவ்வாய் இறைவன் தந்தை குரு ஸ்தானம்
(சூரியன் 9இல் உச்சமடைவதால் தந்தை)

சூரியன் சந்திரனிலிருந்து பத்திற்குடைய சுக்கிரன் புகழுக்கு காரகன், தன காரகன் (வேலைக்கு சென்றால்தானே பணம், பதவியினால் புகழ்)

சூரியன் சந்திரனிலிருந்து 11க்குரிய புதன் வெற்றிக்கு காரகன். வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்.

சூரியனிற்கு 12இல் இருக்கும் சந்திரன் மாத்ரு காரகன் (12 அயன போக ஸ்தானம் / படுக்கை ஸ்தானம்)

(இதே போல சூரியனிலிருந்து இடதுபறமாகவும், சந்திரனிலிருந்து வலதுபுறமாகவும் சிந்தித்து பார்க்கலாம்)

பிரசன்னம்

பிரஸன்னம் - குழந்தை பிறக்குமா

19-04-20017 அன்று மதியம் சுமார் 1:30 மணிக்கு முகநூல் நண்பர் ஒருவர் தனது மகனுக்கு அடுத்த குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டார்

அன்றைய தினம் 19-04-2017
புதன் கிழமை உத்திராடம் நட்சத்திரம்

கேள்வி கேட்ட நேரம் புதன் ஹோரா

ஹோரா நாதன் புதன் கோச்சாரத்தில் சர ராசியான மேஷத்தில் உச்ச சூரியனுடன்

சரம் ஏற்கனவே நடக்க ஆரம்பித்த விசயங்களை குறிக்கும்.

உச்ச சூரியனும் கேள்வியின் தன்மையை மிக பலமாக உறுதிப்படுத்துகின்றார்

எனவே உங்கள் மருமகள் கர்ப்பமாக இருக்கின்றாரா என்று கேட்டேன். ஆம் என்று சொன்னார்.

ராம நாமம்

எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அனுமன் சூட்சமமாக இருப்பார்.

இதனை சோதனை செய்ய இரவில் ஆள் அரவமில்லாத தெருவில் (சுமார் 11:30pm) நின்று இராமநாமம் ஜெபித்தேன். அப்போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் என்னை கடந்து சென்றது.
வாகனம் இரண்டிலும் அனுமன் படம் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் ஒருவர் என்னருகில் வண்டியை நிறுத்தினார். அவர் நெற்றியில் செந்தூர திலகம் வைத்திருந்தார். அவசரமாக நங்கநல்லூரில் உள்ள மருத்துமனைக்கு செல்வதாகவும் வழிமாறி இந்த இடம்
வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நான் அவருக்கு வழி சொன்னதும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

கர்மாவை நீக்கும் வழி

முருகன் இருப்பிடமே முக்தி தலமாகும்

முக்தி என்பது கர்மங்களில் இருந்து விடுபடுதலை குறிக்கும்.

கர்மகாரகன் சனி. அவர் நீசமடையும் இடம் மேசம். மேசத்தின் அதிபதி செவ்வாய்.
முருகனை குறிக்கும் கிரகம் செவ்வாய்.
மேசத்திலேயே ஆத்மகாரகன் சூரியன் உச்சமடைகின்றார்.

எனவே புராதன முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வழிபட்டாலே கர்மங்கள்
தன்னால் விலகும்.

செவ்வாய்

செவ்வாயின் காரகத்துவங்கள் எது கிடைத்தாலும் வலி இல்லாமல் இருக்காது

உதாரணம்
காவல்துறையில் சேர்வதற்கும் இராணுவத்தில் சேருவதற்கும் உடல் வலிமை மிக முக்கியம். வைராக்கியம் முக்கியம்.
உடல் வலிமை என்பதே உடலை வருத்தி உடலை கட்டு கோப்பாக வைத்திருப்பதுதான்

இராணுவத்தில் குண்டடி பெற்றாலோ எதிரிகளை வீழ்த்தினாலோதான் பதக்கம் பெற முடியும்.

சகோதரனாக இருந்தாலும் இளவயதில் அவனுடன் சண்டை போட்டிருப்போம்.

நுண்ணிய அறுவை சிகிச்சையானாலும் அக்குபஞ்சர் ஆனாலும் சிறிதளவு வலி இருக்கத்தான் செய்யும்.

தீயணைப்பு வீரன் ஆனாலும், சமையல் செய்பவராக இருந்தாலும் நெருப்பு சுடத்தான் செய்யும்

பிறப்பு லக்கின பொது பலன்கள்

பிறப்பு லக்கின பொது பலன்கள்

லக்கினம் அல்லது லக்கினாதிபதி
ஸ்திர நிலமான ரிசபத்தில் இருந்தால் பொறுமையாக.இருப்பார்கள். கடும் உழைப்பாளிகள். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்க ஏற்றவர்கள்.
அகழ்வாரை தாங்கும் நிலம்

லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஸ்திர நெருப்பான சிம்மத்தில் இருந்தால் இவர்களுடைய நினைவாற்றலை கண்டு உலகம் வியக்கும். நியாபக சக்தி, பல கலைகளில் ஈடுபாடு இருக்கும்.
தொட்டணை தூறும் மணற்கேணி

லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஸ்திர நீரில் இருந்தால் உணர்ச்சிகளுக்கு அடிமையாவார். கோபமடைவார்கள். உணர்ச்சிவசத்தால் மிகுந்த அன்பையும் மிகுந்த கோபத்தையும் காட்டுவார்கள்.
பிடிவாத குணம் இருக்கும்.
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு

லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஸ்திர காற்றில் இருந்தால் நல்ல சிந்தனைவளம் உள்ளவர். எதிலும் பணம் பண்ணுவதையே நோக்கமாக கொள்வார்கள்
கற்பனா சக்தி, சிந்தனை வளம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

தசா கணிதம்

தசா கணிதம்

ஒரு குழந்தை விசாகம் இரண்டாம் பாதத்தில் ஆரம்பத்தில் பிறப்பதாக கொள்வோம்.

ஒரு நட்த்திர பாதம் என்பது 3 பாகை 20 கலை

எனவே கெற்பத்தில் விசாகம் 3 பாகை 20 கலை சென்றுவிட்டது. மீதமுள்ள 10 பாகைக்குறிய குரு தசையின் இருப்பை கணக்கிடுதல் வேண்டும்.

இங்கு ஒரு நட்சத்திரத்தின் மொத்த அளவான 13 பாகை 20 கலையை 60 ஆல் பெருக்க வேண்டும்
13*60+20=800

குரு தசா வருடம் 16 ஆண்டுகள்

கெற்பத்தில் சென்றது போக மீதி உள்ள பாகை 10 பாகை இதனை 60 ஆல் பெருக்க
600 வரும்

(16/800)*600=12

எனவே பிறப்பின் போது குரு தசா இருப்பு
12 ஆண்டுகள் ஆகும்.

பிரஸன்னம்



சரம் நெருப்பு மேசம்
ஸ்திர நெருப்பு சிம்மம்
உபயம் நெருப்பு தனுசு

சரம் நிலம் மகரம்
ஸ்திர நிலம் ரிசபம்
உபயம் நிலம் கன்னி

சரம் காற்று துலாம்
ஸ்திரம் காற்று கும்பம்
உபயம் காற்று மிதுனம்

சரம் நீர் கடகம்
ஸ்திரம் நீர் விருச்சிகம்
உபயம் நீர் மீனம்

சரம் மாற்றத்திற்கு உட்பட்டது, இறந்த காலம்
ஸ்திரம் மாறாதது, நிகழ்காலம்
உபயம் மாற்றம்/மாறாதது எதிர்காலம்

பிரஸன்ன லக்னம் சரத்தில் இருந்தால் கேள்வியானது ஏற்கனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. மாற்றத்திற்கு உட்பட்டது

ஸ்திரத்தில் இருந்தால் கார்யம் உடனே நடக்கும். மாறாதது.

உபயத்தில் இருந்தால் எதிர்காலத்தில் நடக்கும் அல்லது நடக்காமல் போகலாம்.


சர லக்கினாதிபதி  சரத்திலேயே இருந்தால்
கார்யம் ஏற்கனவே நடந்து முடிந்திருக்கும்

பிரஸ்ஸன லக்னாதிபதி சரமாக இருந்து ஸ்திரத்தில் இருந்தால் கார்யம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றது. பலன்கள் ஒரு வாரத்திற்குள் நடக்கும்.

25/04/2017 தினப்பலன்

25/04/2017 தினப்பலன்
ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம் 12 ஆம் தேதி
செவ்வாய் கிழமை
ரேவதி நட்சத்திரம்
தேய்பிறை சதுர்த்தசி திதி

ஓம் நமசிவாய

அனைவருக்கும் காலை வணக்கம்

மேசம்
தாய் வழியில் மருத்துவ செலவுகள் இருக்கும். வாகனங்கள் பழுது நீக்குவீர்கள். செலவு ஏற்பட்டாலும் லாபம் உண்டு. வெற்றியடையும் நாள் இன்று.

ரிசபம்
பயணங்களால் நன்மை உண்டாகும்.
பதவி புகழ் உண்டு. தனவரவு உண்டு

மிதுனம்
வெற்றிக்கு கடுமையாக போராடுவீர்கள். தனவரவு உண்டு.
தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும்

கடகம்
தேக அசௌகர்யம் உண்டாகும்.
சிலர் வீண் பழிக்கு ஆளாவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய தினம்
இருப்பினும் பெரிய அளவிற்கு பாதிப்புகள் இருக்காது

சிம்மம்
சந்திராஷ்டம தினம் இன்று
கவனம் தேவை

கன்னி
எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. நோய் உண்டாகும். பகைமை உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

துலாம்
காதல், கலைகளில் ஆர்வம், கேளிக்கை, பொழுதுபோக்கு, மந்திர உச்சாடனம், தியானம் போன்ற நிகழ்வுகள் நடக்கும். இன்று உடலை வருத்தி எந்த வேலையும் செய்யமாட்டீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்
வெளியூர் சென்றவர்கள் வீட்டிற்கு வந்து சேர்வீர்கள். புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் உண்டாகும்
ஒரு சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

தனுசு
எழுத தொடங்குவீர்கள், தகவல் தொடர்பு, ஒப்பந்தங்கள் போடுதல், வீடு வாகனம் விற்க முயற்சித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கும்

மகரம்
பேச்சில் ஞானம், முதிர்ச்சி தெரியும் பேச்சுத்திறன் அதிகரிக்கும். சுகபோஜனம், தன வரவு,

கும்பம்
நற்சிந்தனை, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மூளையின் திறன் அதிகரிக்கும். கௌரவம் உண்டாகும்.

மீனம்
தன்னிலை மறத்தல், மருத்துவம், செலவு உண்டாகும். ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். மோட்சம் அதாவது கர்மங்களில் இருந்து விடுபட சிந்தனை செய்வீர்கள்

இன்று தனவரவு உள்ள ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம்
கன்னி, துலாம், மகரம்

செலவு ஏற்படும் ராசிகள்
மேசம் மீனம்

பயணம் செய்யும் ராசிகள்
மகரம் கடகம்
தனுசு மிதுனம்

நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா செந்தில்குமார்
சென்னை
7200044010

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரக காரகங்கள் - புதன்
--------------------------

கிரக காரகங்கள் அனைத்தும் ஒரு கிரகத்தின் உருவம், நிறம், சுழற்சி வேகம், வானத்தில் அது நிற்கும் இடம் இவைகளை பூமியில் உள்ள விசயங்களோடு ஒப்பிட்டுக்கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஜோதிடம் ஒரு ஒப்பீட்டியல் எனக்கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்காக புதனின் காரகங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் புதனின் காரகங்கள்
1.கிரகங்களில் உருவத்தில் மிக சிறிய கிரகம் புதன் என்பதால் சிறுவன், இளைஞன், இளவரசன் என அழைக்கப்படுகிறான்.
2.சூரிய ஒளி முதலில் புதன் மீது விழுகிறது, மனித உடலில் சூரிய ஒளி தோல் மீது விழுகிறது, இதனால் புதன் தோலுக்கு(சருமம்) காரகனாக கருதப்படுகிறான்.
3.புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே சஞ்சரிக்கிறான், இதனால் புதனுக்கு நட்பு காரகன் என்று பெயர்.
4.அதிகப்பட்ச சூரிய ஒளி புதனுக்கே கிடைக்கிறது. ஓளியானது அறிவிக்கு ஒப்பானது. இதனால் புதன் அறிவுக்காரகன் என அழைக்கப்படுகிறான். அறிவு, கல்வி சம்பந்தமான அனைத்து காரகங்களும் புதனை சாரும்.
5.சந்திரனுக்கு அடுத்த நிலையில் கிரங்களில் அதி வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதன் என்பதால் சுறுசுறுப்புக்கு புதன் காரகனாகிறான்.
6.சந்திரனைப்போன்று புதனுக்கும், வளர்பிறை, தேய்பிறை தோற்றம் இருப்பதால் புதன் ஒரு பெண் கிரகமாக பாவிக்கப்படிகிறது.
7.புதன் பச்சை நிறத்தில் இருப்பதால், பச்சை நிறம், பச்சை நிறமுள்ள மரகதக்கல், பசுமையான இடங்கள், இவைகளுக்கு புதன் காரகனாக சொல்லப்பட்டுள்ளது.
8.அடிக்கடி வக்கிரமடையும் கிரகம் புதனாகும், நாக்கில் பிறக்கும் வாக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரி இல்லாமல் அடிக்கடி முன்னுக்குப்பின் முரண்படுவதால், நாக்கு, வாக்கு இவைகளுக்கு காரகன் புதனாகும்.
9.மனித உடலில் அதிக அளவில் சூரிய ஒளியை பெறும் உறுப்பு தோல் என்றாலும், குறிப்பாக அதிக சூரிய ஒளி பெறும் உறுப்பு நெற்றியாகும். எனவே நெற்றிப்பகுதியை குறிக்கும் கிரகம் புதனாகும்.
10.சூரியனுடன் எப்பொழுதும் இணைந்தே இருக்கும் கிரகம் புதன் என்பதால் உடல் உறுப்புகளில் எல்லா உறுப்புகளோடும் இணையும் வலிமை பெற்ற உறுப்பு கைகள் மட்டுமே. எனவே கைகளைக்குறிக்கும் கிரகம் புதனாகும்.
11.சூரியனின் அதிதேவதை சிவனாகும், சிவனுடன் இணைந்து பிரிக்கமுடியாமல் இருக்கும் தேவதை விஷ்ணுவாகும். சிவனும்,விஷ்ணுவும் இணைந்த அம்சம் சங்கர நாராயண அம்சம் என்ப்படும். எனவே சூரியனுடன் இணைந்தே இருக்கும் புதனுக்கு அதிதேவதை விஷ்னுவாகும்.
12.பச்சை நிறத்தில் உள்ள பறவையாகவும், பேசும் திறமையுள்ள பறவையாகவும் இருக்கும் கிளி புதனுக்குரிய பறவையாகும்.
13.சூரியனுடன் எப்பொழுதும் இணைந்தே இருக்கும் கிரகம் புதன் என்பதால் மனிதர்கள் கூடும் பொது இடங்கள் அனைத்தும் புதனுக்குரியதாகும். வீட்டில் எல்லோரும் கூடியிருக்கும் வரவேற்பறை, ஊரில் பொதுமக்கள் கூடும் மைதானம், விளையாட்டு மைதானம், நாடக, நாட்டிய கொட்டகைகள், திரையரங்குகள், திருமண மண்டபம், பள்ளிகள், கல்லூரிகள், வியாபார சந்தைகள், வணிக வளாகங்கள் இவை புதனுக்குரிய இடங்களாகும்.
14. புதன் மீது சூரிய ஒளி முதலில் விழுவது போல் ஒரு கட்டிடத்தின் மீது சூரிய ஒளி படும்பொழுது, மொட்டை மாடி மீதே சூரிய ஒளி நேரடியாக விழுகிறது எனவே மொட்டை மாடியைக்குறிப்பது புதனாகும்.
15. புதன் மீது சூரிய ஒளி முதலில் விழுவது போல்,தலையில் முடிகுறைவாகி மொட்டையாகியிருப்பவர்களுக்கு மொட்டை மீதுதான் சூரிய ஒளி முதலில் விழும் எனவே மொட்டைத்தலை, வழுக்கைத்தலை இவைகளைக்குறிப்பது புதனாகும்.

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரக காரக விளக்கம்-சந்திரன்
---------------------------------

ஜோதிடம் சாஸ்திரம் கிரகங்கள் பூமியை சுற்றிவருவதாக சொல்லவில்லை. பூமியிலிருந்து வானத்தை பார்க்கும்போது. பூமியை சுற்றிலும் தென்படும் நட்சத்திர கூட்டங்களால் ஆன ஒரு வட்டப்பாதையில் கிரகங்கள் நகர்ந்து செல்வதுபோல் காட்சியளிக்கின்றன. உண்மையில் சந்திரனைத்தவிர வேறு எந்த கிரகமும் பூமியை சுற்றவில்லை. அவை சூரியனையே சுற்றிவருகின்றன. நவக்கிரகங்களில் ஒன்றான சந்திரனுக்கு மூன்று வகையான சுழற்சிகள் உண்டு. அவை
1. சந்திரன் பூமியை சுற்றுகிறது.
2. சந்திரன் தன்னைத்தானே சுற்றுகிறது.
3. சந்திரன் பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றுகிறது.
நவக்கிரகங்களில் பூமியை மிக வேகமாக சுற்றும் கிரகம் சந்திரனாகும். இந்த சந்திரனுக்கு வளர் பிறை,தேய் பிறை தோற்றம் உண்டு. இந்த சந்திரன் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் சுற்றிவரும் கிரகம் சந்திரனாகும்.
ஒரு தாயின் மனமும் உடலும் எப்பொழுதும் தான் பெற்ற குழந்தைகளையே சுற்றிக்கொண்டிருக்கும். அதுபோல் சந்திரன் பூமியில் வசிக்கும் ஜீவ ராசிகளையே சுற்றி சுற்றி வருவதால், இந்த சந்திரனை தாய்க்கு ஒப்பிட்டு மாத்ருக்காரகன் என அழைக்கப்படுகிறது.
இந்த சந்திரன் அமாவாசை நாட்களில் வானத்தில் தெரிவதில்லை. அமாவாசைக்கு அடுத்த நாள் வானதில் ஒரு அரை வட்டக்கோடுபோல் தோன்றி அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நாளில் முழுவட்டமாக காட்சி தருகிறது, பொர்ணமிக்கு அடுத்த நாள் முதல் படிப்படியாக தேய்ந்து மீண்டும் அமாவாசை நாளில் வானத்தில் தென்படாமல் மறைந்துவிடுகிறது. இவ்வாறு சந்திரன் தோன்றி வளர்ந்து, பின் தேய்ந்து மறைந்து போகும் தன்மையானது. மனித உடல் தோன்றி வளர்ந்து ,பின் தேய்ந்து மறைந்து போகும் நிலையுடன் ஒப்பிடப்பட்டு , சந்திரன் உடல் காரகன் என அழைக்கப்படுகிறது.
கிரகங்களில் மிகவும் வேகமாக சுற்றக்கூடியது சந்திரனாகும். இது போல் மனித மனதும் வேகமாக மாறக்கூடியதாகும். எனவே மனோ வேகம் , சந்திரனின் வேகத்திடன் ஒப்பிடப்பட்டு, சந்திரன் மனோக்காரகன் என அழைக்கப்படுகிறது.
சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. பொர்ணமி நாட்களில் இரவு விளக்கு போன்று காட்சியளிக்கிறது. சந்திரனின் வெளிச்சத்தில் நமக்கு கண் பார்வை கிடைக்கிறது. இதனால் சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிகளும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
பூமியானது இரு பங்கு நீரும் ,ஒரு பங்கு நிலமும் கொண்டது போல் மனித உடலும் இரு பங்கு நீரும்,ஒரு பங்கு நிலத்தையும் கொண்டுள்ளது. அமாவாசை நாட்களில் கடல் வற்றி உள்வாங்குகிறது. பௌர்ணமி நாட்களில் கடலில் நீர் அதிகமாகி பொங்கி எழுகிறது. இதன் மூலம் நீர் நிலைகள் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் நீர் நிலைகளை குறிக்கும் கிரகமாக சந்திரனை நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் அமாவாசை நாட்களில் கடல் வற்றுவதுபோல் , அந்த நாட்களில் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு குறைகிறது . பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பதுபோல் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணத்தினால் ரத்தம் மற்றும் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுப்பொருள் மற்றும் திரவப்பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்கு உரியதாக கருதப்படுகிறது.
ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு பாலூட்டி, சோறூற்றி போசாக்கு அளிக்கிறாள். எனவே தாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான்.
கடலை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது,
நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்திரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் தானியம்(அரிசி) வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக்கூறப்படுகிறது.
தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உருப்பாகும். பால் வெண்மை நிரத்தில் சுரக்கும் திரவம் என்பது குறைப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது.
சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும்.
சந்திரனின் குளிச்சியான ஒளிக்கு மயங்காத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளான்.
சந்திரன் எப்பொழுதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதில்லை, எனவே மன சஞ்சலத்தை குறிப்பவனாக சந்திரன் கருதப்படுகிறான்.
சந்திரன் மிகவும் வேகமாக சுற்றக்கூடிய கிரகம் , இதனால் கடலில் அலைகள் தோன்றி நீரை அசைத்துகொண்டே இருப்பது போல் ,மனதிலும் ,உடலிலிலும் சந்திரன் அசைவுகளை ஏற்படுத்துகிறான். இதன் காரணத்தால் மன மாற்றம், உடலுக்கு இடமாற்றம் இவைகளைத்தருபவனாக சந்திரன் கருதப்படுகிறான். இடமாற்றம், பயண சுகம் இவைகளை குறிப்பது சந்திரனாகும்.
வழிபாட்டு முறைகளில் தாய்மையின் அடையாளமாககருதப்படும் அனைத்து அம்மன்களும் சந்திரனுக்குரிய அதிதேவதைகளாகும்.
நோய் தீர்க்கும் பல மூலிகைகள் சந்திர ஒளியில் வளர்வதாகக்கூறப்படுகிறது. எனவே மூலிகைகளை குறிக்கும் கிரகம் சந்திரனாகும்.
அமாவாசை,பௌர்ணமி நாட்களில் மன நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதை அனைவரும் அறிவர். இதன் மூலம் மனதிற்கும் சந்திரனுக்கும் தொடர்பு உள்ளதை புரிந்துகொள்ளலாம்.
சந்திரன் வெண்மையாகக்காணப்பட்டாலும் , அதன் மீது சில கரும்புள்ளிகளும் தென் படுவதைக்காணலாம். எனவே மனிதர்களுக்கு உண்டாகும் களங்கத்தை சந்திரன் குறிப்பதாகக்கூறப்படுகிறது.
எந்த ஒரு கிரகத்தின் கதிர்களும் சந்திரனைத்தாண்டிதான் பூமியை வந்தடைய வேண்டும். எந்த ஒரு கிரகமும் சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கவேண்டும். எனவே சூரியனை ராஜா என்றும், சந்திரனை ராணி என்றும் அழைக்கிறார்கள்.
சந்திரனின் சுழற்சிகாலமும் ,பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலமும் ஒன்றுதான் . அதாவது 28 நாட்களாகும். எனவே சந்தரனுக்கும்,தாய்மைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே பூப்படைந்த பெண்களின் மீது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பெண்களின் மாத விடாய் நிற்கும்போது பலன் பெண்கள் மன உழைச்சலுக்கு உள்ளாவதைக்காணலாம். பூப்படையாத பெண்கள் மீது சந்திரனின் ஆதிக்கம் குறைவாக இருக்கும்.
சந்திரன் ஒளியை மட்டுமில்லாமல் குளிர்ச்சியையும் தரும் கிரகமாகும். எனவே குளிர் சாதன பொருட்களைக்குறிக்கும் கிரகமாகும். மேலும் நீர் பெருக்கி மூலிகைகளான தும்பை, வாழை போன்றவைகளை குறிக்கும் கிரமாகும். பாலுள்ள மரங்களை சந்திரன் குறிக்கும்.

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரக காரக விளக்கம் -சூரியன்
---------------------------------

 வானத்தையும் பூமியையும் ஒப்பிடும் ஒரு கலையே ஜோதிடமாகும். ஜோதிடத்தில் கிரக காரகம், ராசிக்காரகம், பாவ காரகம் என மூன்று முக்கிய உறுப்புகள் உள்ளன. இந்த மூன்று முக்கிய உறுப்புகளைக்கொண்டுதான் ஜோதிட விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் கிரக காரகம் என்பது வெறும் கற்பனை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதை ரிஷிகளின் கண்டுபிடிப்பு, அதனால் இதற்கு யாரும் எந்த விளக்கமும் கேட்காமல் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வாதிடுகிறார்கள். இதை ஆய்வு நோக்கில் யாரும் அனுகவில்லை என்ற பரிதாப நிலையே இன்றளவும் காணப்படுகிறது. என் அறிவுக்கு எட்டியவரை இவை எதுவும் கற்பனை இல்லை, இவை ஒரு ஓப்பீட்டியலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதை விளக்க முயற்சிக்கிறேன்.
 இந்த கிரக காரகம் என்பது கிரகங்களை கண்களால் பார்த்து அவைகளின் தோற்றத்தை வர்ணிக்கும் ஒரு வர்ணனைகளாகவும் , அவைகளின்  தோற்றத்தை பூமியில் உள்ளவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு உவமைகளாகவும் அமைந்துள்ளன. அதாவது நாம் ஒரு கிரகத்தை கண்களால் பார்த்து அதன் தோற்றத்தை விவரித்தால் எப்படி விவரிப்போம். அந்த விவரணைதான் கிரக காரகமாகும். ஒரு கிரகத்தின் வடிவம்(அளவு), அதன் நிறம், அதன் சுழற்சி வேகம், அது வானத்தில் நின்ற இடம், அது செயல்படும் விதம் இது போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டுதான் கிரக காரகங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 முதலில் சூரியனின் காரகங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டன என்று பார்ப்போம். சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு  நாடு  என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
 மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
 இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில்  கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
 வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.மேலும் வெளிச்சம் தரும் தீபம் சூரியக்குரிய காரகமாகும்.
 சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் உள்ள மாணிக்கம் சூரியனுக்குரிய ரத்தினமாகும். சூரியனின் நகர்வுக்குத்தகுந்தவாறு தன் தலையை எப்பொழுதும் சூரியனை நோக்கி நகர்த்தும் சூரிய காந்திப்பூ சூரியனுக்குரிதாகும்.
 சூரியன் வெளிச்சத்தை மட்டுமல்லாமல் உஷ்ணத்தையும் தருகிறது. உடலில் உஷ்ணத்தை பெருக்கும் மிளகாய்,பூண்டு, மிளகு,இஞ்சி,சுக்கு போன்ற காரத்தன்மையுள்ள   பொருட்கள் சூரியனுக்கு உரியவையாக கூறப்பட்டுள்ளது.
 சூரியனின் ஒளி படாத ஒரு உயிரினம் உலகில் இருக்க முடியாது. எனவே சூரியனுக்கு ஆதர்ச பிரேமி என்று பெயர். அதாவது சூரியன் தன் கிரணங்களால் எல்லோரையும் தழுவிக்கொள்பவனாகும். அதாவது எல்லோரையும் நேசிப்பவனாகும். இதன் அடிப்படையில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணம் சூரியனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியனை சமூக சேவகன் என்றும், மானிடப்பிரியன் என்றும் கூறுகிறார்கள்.
 சூரியன் ஒரு நாளும் தன் கிரணங்களை பூமியில் உள்ள ஜீவ ராசிகளின் மீது பாய்ச்ச தவறியதில்லை. ஒரு நாள் கூட உதயமாகாமல் போனதில்லை. இதனால் சூரியனை நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என குறிப்பிடுகிறார்கள்.
 சூரியன் எப்பொழும் ஒளியையும், உஷ்ணத்தையும் உயிர்களுக்கு பாரபட்சமின்றி வாரி வாரி வழங்கி வருவதால், தாராள குணமுடையவன் என்றும், வள்ளல் என்றும் அழைக்கப்படுகிறான்.
 மனித உடலில் சிரசு அதிக சூரிய ஒளியை பெறுவதுபோல் ,பூமியில் உள்ள உயரமான மலைகளும், உயர்ந்த கட்டிடங்களும் அதிக சூரிய ஒளியை பெறும். எனவே மலைகள்,கோட்டை கொத்தளங்களை குறிக்கும் கிரகம் சூரியனாகும். தலையில் வைக்கப்படும் கிரீடம், தலைப்பாகை, வீட்டின் கூரை போன்றவை சூரியனுக்குரியவையாகும்.
 தேவர்களின் தலைவனான இந்திரன் சூரியன் உதிக்கும் கிழக்கு திசைக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளான்.நெருப்பு அம்சமான ருத்திரன் சூரியனுக்கு தேவையாக நியமிக்கப்படுள்ளான்.
 பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் சூரிய ஒளிக்கு உள்ளது. இதனால் சூரியனுக்கு தன்வந்திரி என பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே மருந்தில்லாத மருத்துவத்தை குறிக்கும் கிரகம் சூரியனாகும். வர்மக்கலை, இயற்கை மருத்துவம், நுண் அழுத்த சிகிச்சை, நுண் துளை சிகிச்சை, தொடு சிகிச்சை, பிராண சிகிச்சை, ரேய்கி சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற மாற்று மருத்துவ முறைகள் சூரியனுக்குரியவையாகும்.
 உடல் முழுவதும் சக்தியைப்பரவச்செய்யும் ஜடராக்னியானது (Solar plex) சூரினைக்குறிக்கும்.
 சூரியன் எதையும் மறக்காமல், மறைந்திருப்பதைக்கூட வெளிச்சம் போட்டு காட்டுபவன் என்பதால் , நிர்வாணம், திறந்த மனது, வெளிப்படைத்தன்மைகள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 எல்லா கிரகங்களும் சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கின்றன, ஆனால் சூரியன் மட்டும் தன் சுய ஒளியில் பிரகாசிக்கிறது. எனவே சூரியனுக்கு சுயம் பிரகாசி என்று பெயர். எனவே எதிலும் ஒரு தனித்தன்மை, சுய திறமை, உள்ளுணர்வு , சுயபுத்தி சுயசார்பு அல்லது தற்சார்பு, சுயம்பு இவைகளைக்குறிப்பது சூரியனாகும்.

நன்றி திரு சித்தயோகி சிவதாசன் ரவி

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்