Saturday 3 June 2017

பாசக்கயிறு

சனி கேது பாசக்கயிறு

சனி ஆயுள்காரகன்
கேது சுருக்குபவன், மோட்சகாரகன், விடுதலை அளிப்பவன்

எமன் பாசக்கயிறை கொண்டுதான் மக்களின் கர்மா முடிந்தவுடன் உயிரை பறிக்கிறார்.

சனி ராகு
கர்மங்களை பெருக்கும்,
பாவங்களை சேர்க்கும்
பைரவர் அம்சம்

சனி கேது
கர்மங்களை தடை செய்து சுறுக்கும் தன்மை கொண்டது. பாவங்களை சுறுக்கும்.
எமன் அம்சம்.

சூரியன் செவ்வாய் சனி கேது

உண்மையான சிவனடியார்களை உயிரை பறிக்க எமனுக்கு அனுமதி இல்லை. அவர்களின் உயிரை எடுக்கும் அதிகாரம் சிவபெருமானின் பூதகணங்களுக்கு மட்டுமே உண்டு. செவ்வாய் அதிகாரத்தினை குறிப்பவர்.

பணம் வரும் நாட்கள் பகுதி 1

பணம் வரும் நாட்கள்

கோள்சாரத்தில் உங்கள் ராசிக்கு இரண்டில் ஏதாவது ஒரு கிரகம் செல்ல வேண்டும்

அப்படி செல்லும் கிரகத்தின் உடைய நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு கிரகத்தின் நட்சத்திரங்களில் கோச்சார சந்திரன் செல்ல வேண்டும். அப்படி சந்திரன் செல்லும் தினம் பணம் வரும்.

உதாரணம்
மீன ராசி.
கோள்சாரத்தில் மீனராசிக்கு இரண்டாவது ராசியில் கோச்சார புதன் செல்கிறது.

புதனின் நட்சத்திரங்ஙளான ஆயில்யம் கேட்டை ரேவதி ராசியில் சந்திரன் செல்லும் போது பணம் வரும்.

புதன் அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே இருக்கும். இந்த முறையில் அதிக பட்சம் மூன்று நாட்களே வரும்.

வருட கிரகங்களான சனி,குரு,ராகு,கேது இவற்றில் ஒன்று ராசிக்கு இரண்டில் இருந்தால், சந்திரன் அந்த கிரகத்தின் நட்சத்திரங்களில் செல்லும் போது தொடர்ந்து பணம் வரும்.(அந்த கிரகம் அந்த இராசியில் இருக்கும் வரைதான் பணம் வரும்.அடுத்த ராசிக்கு சென்றுவிட்டால் வராது)

பணம் வரும் நாட்கள் பகுதி 2



உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டுக்குடையவனின்
நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் செல்ல வேண்டும்.

அப்படி செல்லும் கிரகங்களின் நட்சத்திரங்களில் சந்திரன் செல்லும் போது பணம் வரும்

உதாரணம்
மீனராசி

மீன ராசிக்கு இரண்டிற்குடையவன் செவ்வாய்.

செவ்வாயின் நட்சத்திரங்கள் மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம்

தற்போது கோள்சாரத்தில் கேது அவிட்டம் நட்சத்திரத்தில் செல்கின்றது

கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரங்களில் சந்திரன் செல்லும் போது பணம் வரும்

பணம் வரும் நாட்கள் பகுதி 3


உங்கள் ஜென்ம ராசிக்கு 2 &10 வது ராசிகளில் கோள்சார சந்திரன் செல்லும் போது பணம் வரும்

பணம் வரும் பகுதி 4



உங்களுக்கு தினசரி பணம் வேண்டுமா

யாரும் இதுவரை சொல்லிவிடாத பதிவு

இப்பதிவு புரியவில்லை எனில் மீண்டும் மீண்டும் படியுங்கள்

அன்றைய சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து கொண்டு குளித்துவிட்டு விளக்கேற்றி ஒரு டம்ளரில் நீர் வைத்து ஊதுபத்தி ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.

சூர்யோதயம் ஆவதற்கு 10 நிமிடம் முன்னால்
ஒரு புது வெள்ளைத்தாளில் ஜாதக கட்டம் மட்டும் போடுங்கள்

அதில் உங்கள் ராசியினை மட்டும் குறியுங்கள்.

பின்னர் கோச்சார சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியை நீங்கள் வரைந்த ஜாதக கட்டத்தில் சந்திரனுக்கு இரண்டில் குறிக்க வேண்டும்.

(((உதாரணம்
நாளை சூர்யோதயத்தின் போது கோச்சார சந்திரன் செல்லும் நட்சத்திர நாதன் ராகு.
ராகுவை நீங்கள் வரைந்த ஜாதக கட்டத்தில் ராகுவை எழுதுங்கள்)))

இப்போது அந்த ஜாதக கட்டம் வரைந்த தாளை சிறிது நேரம் விளக்கின் தீப ஒளி
விழுமாறு பிடிக்க வேண்டும்.
மனதில் இன்றைய தினம் பணம் சம்பாதிக்க வேண்டும் என மனதில் நினைக்க வேண்டும்

இவ்வாறு தினம்தோறும் செய்ய பனவரவு உண்டாகும்

நண்பர்கள் பரிசோதித்து உங்கள் அனுபவங்களை பதியுங்கள்

வேலை

பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் நல்ல வேலை யாருக்கு

பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் குரு ஜாதகரை குறிக்கும்.
சனி ஜாதகரின் கர்மத்தை குறிக்கும். குருவின் நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சனி ஆகும். துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சனி உச்சமடைகின்றார். அதேபோல சனியின் நட்சத்திரத்தில் குரு உச்சமடைகின்றார். அதாவது கடக ராசி பூச நட்சத்திரத்தில் குரு உச்சமடைகின்றார்.

இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் காலப்புருஷ லக்னத்திற்கு 10ஆம் அதிபதியான கர்மகாரகன் சனி தன்வீட்டிற்கு 10 இல் உச்சமடைகின்றார். சனி உச்சமடையும் இராசிக்கு 10ஆம் இடத்தில் குரு உச்சமடைகின்றார். எனவே குரு சனி சேர்க்கை நல்ல சிறப்பான உத்தியோகத்தை அமைத்து தரும்.

குருவும் சனியும் காலபுருஷ லக்னத்திற்கு 9 ,10 ஆம் அதிபதிகளாக வருவதால் குரு சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு தர்மகர்மாதிபதி யோகமும் ஏற்படுகின்றது

பெயரியல்

ஆச்சார்யா தேவோ பவ

பெயர் காரணம்

அஹல்யா

இது ஓர் பெண்ணின் பெயர்

நெருப்பு ராசியான மேஷத்தில் சுக்கிரன் உடன்
நெருப்பை குறிக்கும் சூரியன்
திரியை குறிக்கும் புதன்
கடினமான மணல் விளக்கு செவ்வாய்

மேலும்
அகல் விளக்கை யாரும் எளிதில் உடைக்கலாம். செவ்வாயுடன் புதன் உம் மேஷத்தில் இருப்பதால். மேலும்
சிம்மத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள்

...
ஆச்சார்யா
7200044010

ஆதித்ய_ஹ்ருதயம்

#ஆதித்ய_ஹ்ருதயம் - #ஸ்லோகம்

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

காதல் திருமணம்

#LoveAstrology

புதன் கேது சேர்க்கை இருந்து
காதலிப்பவர்கள் கோச்சார குரு
பிறப்பு புதன் கேதுவை பார்க்க காதல் திருமணம் நடக்கும்

பெண் ஜாதகத்தில்
சுக்கிரன் வக்கிரமாக இருந்து அதற்கு 12இல் செவ்வாய் இருந்து
அந்த செவ்வாய் ஐ கோச்சார குரு பார்வையிட காதல் திருமணம் நடக்கும்

திருமணம் நடைபெறும் காலம்

#திருமணம் நடைபெறும் காலம்

ஜாதகம் பார்க்கும் போது

ஜாதகரின்
நடப்பு தசா நாதன் பாவச்சக்கரத்தில் ஒற்றைப்படை பாவங்களில் இருந்து

நடப்பு புத்தி நாதனும் ஒற்றைப்படை பாவங்களில் இருந்து

இவர்களுக்கு 1,2,5,9 இல் ராகு கேது இல்லை எனில் திருமணம் உடனே நிகழும்.

திருமணம்

பெண் ஜாதகத்தில்

செவ்வாய் ராகு சேர்க்கை உள்ள பெண்களுக்கு

1) ஒரே ஜாதியில் வேறு ஒரு உட்பிரிவில் திருமணம் செய்ய வேண்டும்.

அல்லது

2) வெளிமாநில / வெளிநாட்டு மாப்பிள்ளையாக பார்க்க வேண்டும்

3) வேறு ஜாதி மதம் கொண்ட மாப்பிள்ளை

இப்படி பார்க்க ராகுவின் தோஷம் நீங்கும்

குறிப்பு
திருமணமாகி குழந்தை பெற்ற பின் குழந்தை ஜாதகத்தில் சூரியன்+ராகு சேர்க்கை இருந்தால் அவர் கண்டிப்பாக வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்.
இதேபோல குழந்தை ஜாதகத்தில் 9க்குடையவனுடன் ராகு இருந்தால்உம் மேற்கூறியவாறு செய்ய வேண்டும்

இல்லை என்றால் தந்தைக்கு ஆபத்து.

பெயரியல்


பெண் ஜாதகம்

மகர லக்னம்

சுக்கிரனும் சனியும் கருவூல ராசியான தனுசில். மிதுனத்தில் இருந்து குரு 7ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்

சந்திரன் தனபாவமான இரண்டில் குருவின் சாரத்தில் (பூரட்டாதி இல் )

பெண்ணின் பெயர் = தனலட்சுமி

திருமணம்





ஆண் ஜாதகத்தில்
குரு + சுக்கிரன் - தெய்வீக குணமுள்ளவள்
சனி + சுக்கிரன் - வேலைக்கு செல்பவள்
குரு,சனி,சுக்கிரன் இவர்களுக்கு ராகு கேது சம்பந்தம் இருக்க கூடாது

பெண் ஜாதகத்தில்
சுக்கிரன் + செவ்வாய்
சனி + செவ்வாய்
செவ்வாய், சுக்கிரன், சனி இவர்களுக்கு
ராகு கேது சம்பந்தம் இருக்க கூடாது

இப்படி இருந்தால் திருமணம் 100% நடக்கும்

சனி செவ்வாய் சேர்க்கை உள்ள பெண்களுக்கு கணவரின் வயது அதிகம் இருந்தால் இளமையில் திருமணம்
இல்லை எனில் சற்று தாமத திருமணம்

காலப்புருஷ தத்துவமும் குழந்தைபிறப்பும்


அஸ்வினி - கேது -நிர்வாணம்

குழந்தை பிறக்கும் போது நிர்வானமாகவே பிறக்கின்றது

இரண்டாவது நட்சத்திரம்
பரணி - தாங்கிப்பிடித்தல்

மூன்றாவது நட்சத்திரம்
கிருத்திகை - தொப்புள் கொடி அறுத்தல்

நான்காவது நட்சத்திரம்
ரோகிணி - குழந்தையை கழுவி அமுதூட்டுதல்

திருக்குறளும் பிருகுநந்தி நாடியும்

திருக்குறளும் பிருகுநந்தி நாடியும்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

இப்படி ஒவ்வொரு திருக்குறளுக்கும் பிருகு நந்தி நாடி மூலம் கிரக சேர்க்கை எடுக்கலாம்

இந்த திருக்குறள் 236 ஆவது திருக்குறள்

ஒளிக்கிரகங்கள் சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் ஆவார்கள்

236= 2 சந்திரன், 3 குரு , 6 சுக்கிரன்

சந்திரன் குரு சுக்கிரன் சேர்க்கை இருப்பவர்கள் புகழடைவார்கள்

குருவுடன் சூரியன், சந்திரன், சுக்கிரன்,
இவர்களில் யாராவது ஒருவர் சேர்க்கை இருந்தால் புகழடைவார்கள்

திருக்குறள் அறம் பொருள் இன்பம் என 3(குரு) பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

மொத்தம் 133 அதிகாரங்கள்
1 - சூரியன் 3 குரு

நாடிமுறைப்படி குரு சூரியன் சேர்க்கை புகழைத்தரும்

ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள்
1 சூரியன் 0 உலகம், சூன்யம்

3 பிரிவுகளும் 133 அதிகாரங்களும், மொத்தம் 1330 குறள்கள் என சூரியன் குரு சேர்க்கை திருக்குறள் முழுவதும் நிரம்பியிருப்பதால்
உலகிலேயே அதிகப்படியான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட என்ற புகழை திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் பெறுகின்றது.

பிருகு நந்தி நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்

ஆச்சார்யா செந்தில் குமார்
7200044010

தமிழ் எழுத்துக்களும் ஜோதிடமும்

ஆங்கிலத்தில் 5 உயிர் எழுத்துக்கள்

தமிழில் 12 உயிர் எழுத்துக்கள் உண்டு. 12 என்பது சூரியன் சந்திரன் சேர்க்கையை குறிக்கும். தாயும் தந்தையுமே உலகம். சூரியன் ஆத்மா, சந்திரன்=உடல். உயிரும் உடலும் இணைந்த மொழி என்பதால் இதனால் சக்தி அதிகம்.

உயிர் எழுத்துக்களை மிக நிதானமாக பொறுமையாக தனிமையில் அமர்ந்து உச்சரித்து பாருங்கள்
உடலில் உள்ள ஒவ்வொரு சக்தி மையமும் தூண்டப்படுவதை உணர்வீர்கள்.

உலகின் மூத்த மொழி.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

மொத்தம் 247 எழுத்துக்கள்
2 என்ற எண் சந்திரனை குறிக்கும்
47 எண் ராகு கேதுவை குறிக்கும்(பரமபதம்)

கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் பூமியை அடைய வேண்டுமானால் ராகு கேதுவை தாண்டியே வர வேண்டும். அதனாலே மற்ற கிரகங்களை விட கேது ராகுவே வலிமையான கிரகங்கள் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை என்ற பரமபத்தில் வெற்றி பெற தமிழ்மொழியே இன்றியமையாதது

தமிழர்களின் வாழ்க்கையை இரண்டு பிரிவாக பார்க்கின்றேன்

ஆங்கிலம் வரும் முன்
ஆங்கிலம் வந்த பின்

ஆங்கிலம் வரும் முன் 247 என்ற எழுத்தே பிரதானமாக இருந்துவந்தது. இதனால் தமிழர்கள் வாழ்க்கை என்னும் பரமபதத்தில் முன்னோடியாக இருந்துள்ளனர். ஆன்மீகமும் இல்லறமும் நன்றாக நடைபெற்றது. தர்ம வாழ்க்கை பிரதானமாக இருந்தது.

ஆங்கிலம் வந்த பிறகு
ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்
26 என்ற எண் சுக்கிரன் சந்திரன் சேர்க்கையை குறிக்கும். சுக்கிரன் சந்திரன் சேர்க்கை முறையற்ற காமத்தையும்
சர்க்கரை வியாதி, நீரிழிவு நோய், கர்ப்பபையில் நீர்கட்டிகள் போன்றவற்றை தரும்.

ஆங்கில மொழி தமிழகத்திற்கு வந்த பிறகே இந்த நோய்கள் தமிழகத்திற்கு வந்தது. ஆங்கிலம் எங்கெல்லாம் உச்சரிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம்
முறையற்ற காமமும் சர்க்கரை வியாதியும் நீரிழிவு நோயும் வரும்.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்