கனி வாங்கிய பிள்ளையார்
புராண காலத்தில் ஒரு முறை நாரதர் கயிலாயத்திற்கு ஞானப்பழம் ஒன்றை கொண்டு வந்தார். அதனை பங்கிட்டு சாப்பிடக்கூடாது, யாராவது ஒருவர் அதை முழுமையாக சாப்பிட்டால்தான் அந்த கனிக்குரிய பலன் கிடைக்கும் என்றார் நாரதர். அவரது இந்த கலகத்தால் பழத்தை யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. விநாயகரும், முருகப்பெருமானும் அந்த பழத்தைப் பெறுவதற்காக போட்டி போட்டனர்.
‘உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த ஞானப் பழம்’ என்று சிவபெருமானும், பார்வதியும் அறிவித்தனர்.
முருகப்பெருமானோ, ‘இதோ! ஒரு நொடியில் உலகத்தைச் சுற்றி வருகிறேன்’ என்று கூறிவிட்டு தன் வாகனமான மயிலில் ஏறி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டுச் சென்றார்.
விநாயகப்பெருமான், ஞானத்தை வடிவமாகக் கொண்டவர் என்பதால் அவரது சிந்தனை வேறு விதமாக இருந்தது. அவர் நாரதரிடம் சென்று, ‘நாரதரே! உலகம் என்றால் என்ன?, அம்மையப்பன் என்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாரதர், ‘உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம்’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வலம் வந்த விநாயகர், தானே அந்த ஞானப்பழத்தை பெற்றுக் கொண்டார். தாய், தந்தையே உலகம் என்பதை வலியுறுத்துவதாக இந்த புராணக்கதை அமைந் திருக்கிறது.
அம்மா என்றால் சந்திரன்
அப்பா என்றால் சூரியன்
சந்திரனின் கடக ராசி மோட்சத்தை குறிக்கும்
சூரியனின் சிம்மராசி அறத்தை, தர்மத்தை குறிக்கும்
எவன் ஒருவன் அறத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து மோட்சம் வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்கே ஞானம் கிட்டும்
புராண காலத்தில் ஒரு முறை நாரதர் கயிலாயத்திற்கு ஞானப்பழம் ஒன்றை கொண்டு வந்தார். அதனை பங்கிட்டு சாப்பிடக்கூடாது, யாராவது ஒருவர் அதை முழுமையாக சாப்பிட்டால்தான் அந்த கனிக்குரிய பலன் கிடைக்கும் என்றார் நாரதர். அவரது இந்த கலகத்தால் பழத்தை யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. விநாயகரும், முருகப்பெருமானும் அந்த பழத்தைப் பெறுவதற்காக போட்டி போட்டனர்.
‘உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த ஞானப் பழம்’ என்று சிவபெருமானும், பார்வதியும் அறிவித்தனர்.
முருகப்பெருமானோ, ‘இதோ! ஒரு நொடியில் உலகத்தைச் சுற்றி வருகிறேன்’ என்று கூறிவிட்டு தன் வாகனமான மயிலில் ஏறி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டுச் சென்றார்.
விநாயகப்பெருமான், ஞானத்தை வடிவமாகக் கொண்டவர் என்பதால் அவரது சிந்தனை வேறு விதமாக இருந்தது. அவர் நாரதரிடம் சென்று, ‘நாரதரே! உலகம் என்றால் என்ன?, அம்மையப்பன் என்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாரதர், ‘உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம்’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வலம் வந்த விநாயகர், தானே அந்த ஞானப்பழத்தை பெற்றுக் கொண்டார். தாய், தந்தையே உலகம் என்பதை வலியுறுத்துவதாக இந்த புராணக்கதை அமைந் திருக்கிறது.
அம்மா என்றால் சந்திரன்
அப்பா என்றால் சூரியன்
சந்திரனின் கடக ராசி மோட்சத்தை குறிக்கும்
சூரியனின் சிம்மராசி அறத்தை, தர்மத்தை குறிக்கும்
எவன் ஒருவன் அறத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து மோட்சம் வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்கே ஞானம் கிட்டும்